விஜய் விரும்பி நடித்த படம் ‘சச்சின்’: தயாரிப்பாளர் தாணு தகவல்

வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகும் படங்கள் திங்கட்கிழமையை தாண்டி விட்டாலே வெற்றி விழா கொண்டாடுகிற காலகட்டத்தில், சமீபத்தில் , சமீபத்தில் ரீ ரிலீஸ் ஆன சச்சின் படமும் வெற்றி விழாவை கொண்டாடியுள்ளது. 2005ம் ஆண்டு வெளியான ‘சச்சின்’ 20 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் 18ம் தேதி 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானதுபெரிய அளவில் வசூலையும் குவித்தது.

இதையொட்டி அதன் வெற்றி விழா நடந்தது.விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு பேசியதாவது: ‘கலைப்புலி’ எஸ்.தாணு பேசியதாவது : ‘தளபதி’ விஜய்யிடம் எப்படி சச்சின் திரைப்படம் சென்றது என்பதை கூறினால் ஒரு நாள் போதாது. ‘தளபதி’ விஜய் திருப்பாச்சி, மதுர போன்ற அதிரடி திரைப்படங்களில் கவனம் செலுத்தும் பொழுது, ஒரு மாற்றத்திற்காக ‘தளபதி’ விஜய்யுடன் கலந்துரையாடும் போது இயக்குனர் ஜான் மகேந்திரன் பற்றி கூறினேன். அவர் என்னிடம் ‘குஷி’ போன்ற கதை ஒன்றை கூறினார்,நீங்கள் கேட்கிறீர்களா?என்று கேட்டேன். அதன் பிறகு இயக்குனர் ஜான் மகேந்திரன் ‘தளபதி’ விஜய்யிடம் கதை  கூற ஏற்பாடு செய்தேன். ஒன்றறை மணி நேரத்திற்கு பிறகு ‘தளபதி’ விஜய்யிடமிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது, ‘கதை மிகவும் பிடித்திருக்கிறது; கண்டிப்பாக பண்ணலாமென்று’ கூறினார்.உலகமெங்கும் 200ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி வெளியிட்டேன். திரைப்படத்தை வாங்கிய அனைத்து விநியோகஸ்தர்களும் நல்ல வசூல் சாதனை செய்ததாக கூறினார்கள். 200 நாட்கள் கடந்தும் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது

இப்பொழுது விளம்பரப்படுத்துதலின் செலவு குறைந்திருப்பதாலும், டிஜிட்டல் ஊடக விளம்பரங்கள் மூலம் ரசிகர்களை எளிதாக சென்றடைவதன் மூலம் ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக கொண்டாடி, மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளார்கள். ‘சச்சின்’ மறுவெளியீடு செய்த மறுநாள் என் குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றேன். அப்படி ஒரு மக்கள் கூட்டத்தை நான் பார்த்ததில்லை. தயாரிப்பாளர்களுக்கு எந்த ஒரு சிரமமும் இல்லாமல், அவர்களை உயர்த்தி ஊக்குவிக்கும் நடிகர்களில் ‘தளபதி’ விஜய்யும் ஒருவர். ‘சச்சின்’ திரைப்படம் மீண்டும் வெற்றியடைய திரையரங்கு உரிமையாளர்களும் மிகப்பெரிய காரணம். இவ்வாறு அவர் பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.