20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருவபர் திரிஷா. அவர் நடிப்பில் தற்போது ரிலீசாகி உள்ள திரைப்படம் ராங்கி. இதில் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்திருக்கிறார் திரிஷா. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது.
எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய சரவணன் தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதி உள்ளார். கடந்த 2019-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இருந்த நிலையில், தற்போது அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு ஒரு வழியாக ரிலீஸ் ஆகி உள்ளது.
நடிகை திரிஷா நடிப்பில் கடைசியாக வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. குறிப்பாக அதில் திரிஷா நடித்திருந்த குந்தவை கதாபாத்திரத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து இருந்தது. இதன்காரணமாக ராங்கி படத்திற்கு அதே அளவு ஓப்பனிங் கிடைக்கும் என நினைத்து காலை 7 மணிக்கு ஸ்பெஷல் ஷோ போடப்பட்டது.
இதற்காக சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் திரிஷாவுக்கு பிரம்மாண்ட கட் அவுட் எல்லாம் வைக்கப்பட்டு இருந்தது. காலையில் திரிஷா தியேட்டருக்கு வந்ததும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து உள்ளே படம் பார்க்க சென்றபோது தான் திரிஷாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தியேட்டரில் கூட்டமே இல்லாமல் பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்ததை பார்த்து திரிஷா அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பெரிய ஹீரோக்கள் போன்று தனக்கும் ரசிகர் கூட்டம் அலைமோதும் என்று பேராசைப்பட்ட த்ரிஷாவுக்கு ரசிகர்கள் பெரிய உப்பாக வைத்துள்ளனர்.