கடந்த 2005-ம் ஆண்டு இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சந்திரமுகி’. பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள ‘சந்திரமுகி’ பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய தபடம் என்ற பெருமையையும், அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையையும் பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியானது.
‘சந்திரமுகி’ இரண்டாம் பாகத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. அதன்படி, பி.வாசு இயக்கும் இந்தப் படத்தை, லைகா நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். ரஜினி நடிக்க மறுத்துவிட்ட நிலையில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார்.
சந்திரமுகியின் பலமே பெரிய கண்கள்தான். ஜோதிகாக கண்களாலேயே மிரட்டுவார். சிறிய கண்களை கொண்ட கங்கனா சந்திரமுகியாக தேறுவாரா? என்பத படம் வந்த பிறகுதான் தெரியும்